( காரைதீவு நிருபர் சகா)

 ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு புதிதாக  புதியதொரு வாகனம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பெயர் பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

 ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தர்மலிங்கம் பிரபா சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தெளபீக் கலந்து சிறப்பித்தார்.

 சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன்  ,மண்முனைப்பற்று பிரதேச சபைத் தலைவர் ரி.நித்தியானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

மேலும் மட்டக்களப்பு பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளர் டாக்டர்.எம்.மயூரன் ,காத்தான்குடி வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.எஸ்.எம்
ஜாபீர் , ஆரையம்பதி மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.ரி. கௌரி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours