( காரைதீவு  சகா )

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் முப்பெரும் விழா எதிர்வரும் வைகாசி மாதத்தில் நடைபெற இருக்கிறது .

அதற்கு முன்னோடியாக கலந்துரையாடல் கூட்டங்கள் அமைப்பின் தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் நடைபெற்று வருகிறது.

 இறுதியாக சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.

 பேரவையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அட்சயம் கவிதை நூல் வெளியீட்டு விழா "மங்கையர் திலகம்" விருது வழங்கும் பாராட்டு விழா சிறப்பு கவிதை உரைப்போர் தெரிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதான உரையை நிகழ்த்தினார்.
 கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
 எதிர்வரும் வைகாசி மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours