(கனகராசா சரவணன்))


கல்;முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி பஸ்வண்டி சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில்  கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (8) பகல் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.  

கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் தனியார் பேருந்தி நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் குறித்த நபர்  பஸ் நிலையத்தில் இருந்து  போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லாது போக்குவரத்து சேவையில் ஈடுபடுதற்கு பஸ்வண்டி சராதிகளிடம் தொடர்ச்சியாக   இலஞ்சம் வாங்கிவருவதாக இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் நடத்துனருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று பகல் 11.30 மணியளவில் சாரதியிடம்  200 ரூபா இலஞ்சமாக பஸ் நிலைய பொறுப்பதிகாரி வாங்கியபோது  அங்கு மாறு வேடத்தில் இருந்த இலஞ்ச ஓழிப்பு பிரிவினர் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு அழைத்துச் சென்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours