( வி.ரி. சகா)

 அம்பாறை மாவட்டத்தில் உள்ள சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

 நேற்று முன்தினம் சனிக்கிழமை அதற்கான வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் போன்ற கிரியைகள் இடம்பெற்றன.

 கும்பாபிஷேக பிரதம குரு சிவாச்சாரிய திலகம் சிவப்பிரம்மஸ்ரீ சி.கு.
 கணேசமூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலே  பாலஸ்தாபனம் நடைபெற்றது.

 நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 தொடக்கம் 9.23 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையிலே பிள்ளையாருக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours