நூருல் ஹுதா உமர்.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் LDSP நிகழ்ச்சி திட்டத்தினூடாக நிர்மானிக்கப்பட்ட பாலர் பாடசாலையின் முதாலாம் மாடி கட்டிட தொகுதி கடந்த 22.02.2022 அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அதனுடைய இரண்டாம் மாடி கட்டிடத்தொகுதி (11) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் தலைமயில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல இச்செயற்திட்டத்தை முன்நின்று செயற்படுத்திய முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷரப் தாஹிர் அவர்கள் ஆளுனர் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கி நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் கெளரவிக்கப்பட்டிருந்தார்.
இதில் உரையாற்றிய ஆளுனர் செந்தில் தொண்டமான், நம் நாட்டில் பாலர் பாடசாலைகளை பொருத்தமட்டில் இன்னும் குடிசைகள் போன்ற அமைப்பில் தான் காணப்பட்டு வருகின்றது. இன்று இப்படியான பாரிய கட்டிடத் தொகுதியை இங்கு நிர்மாணிப்பதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் தாஹிர் அவர்களும் உறுப்பினர்களும் இணைந்து பாரிய முயற்சியினை எடுத்திருப்பது முன்மாதிரியானதும் பாராட்டத்தக்கதுமான விடயமாகும் என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இப்படியான பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டினை எதிர்கால குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்திய நிந்தவூர் பிரதேச சபைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த பாலர் பாடசாலையின் ஆசிரயர்கள் திறமையான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும், கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளருமாகிய என். மணிவண்ணண், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷரப் தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லதீப், பிரதம பொறியியலாளர் ஏ.எம். ஷாஹிர், கல்முனை மாநகர சபை ஆணையாளர், காரைதீவு பிரதேச சபை செயலாளர், சம்மாந்துரை பிரதேச சபை செயலாளர், திருக்கோவில் பிரதச சபை செயலாளர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் வை.எல். சுலைமா லெப்பை, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் கெளரவ உறுப்பினர்களான ஏ. அஷபர், கே.எல் றபீக், திருமதி. பஸபிஹா,
திருமதி. பஷீரா உம்மா, திருமதி. சுதாமதி, திருமதி. றிஹானா பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொது மக்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
திருமதி. பஷீரா உம்மா, திருமதி. சுதாமதி, திருமதி. றிஹானா பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொது மக்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours