கிழக்கு மாகாண குடியேற்ற உத்தியோகத்தர் தொழிற்சங்க ஏற்பாட்டில்
"காணிக்கு குருநாதன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் கௌரவிப்பு விழாவும்
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை(9) மாலை கல்முனை கிரிஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர்
பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய "காணிக்கு
குருநாதன்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் உதவி காணி ஆணையாளர்
கே.குருநாதன் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும்
இந்நிகழ்வில் கல்முனை ,சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ,பொத்துவில்,
லகுகல, பிரதேச செயலாளர்கள், உட்பட கிழக்கு மாகாண பேரவை உதவி செயலாளர்
எம்.சி அன்சார், முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதனின் உறவினர்கள்,
நண்பர்கள் ,என பலரும் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours