நூருல் ஹுதா உமர்

சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற வைத்தியசாலை களுக்கிடையிலான பொலித்தீன்  பாவனையை இல்லாமல் செய்து, சுற்றுச்சூழலை அழகுற வைத்திருந்தமை, மற்றும் சுற்றுச்சூழல் பசுமை நடவடிக்கைகளை பராமரித்து வீண்விரயமாதலை குறைத்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக “ஜனாதிபதி சுற்றாடல் விருது“ பெற்ற சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது விபத்துக்கள் மற்றும் காயங்களை சிறப்பாக பராமரித்தமைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட சான்றிதழ்களும் பணிப்பாளர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் மற்றும் தொற்றா நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனிபா மற்றும் திட்டமிடல் வைத்தியர் ஏ.ஆர். அஹமட் நியாஸ் மற்றும் பணிமனை சார்பில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.ஏ வாஜித் மற்றும் பிரிவு தலைவர்கள் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.ஆர். அகமட் நியாஸ் இவ்விருதினை பெற்றமைக்கான வைத்தியசாலையின் அனுபவங்கள் மற்றும் செயற்பாடுகளை விளக்கக் காட்சியுடன் தெளிவுபடுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours