பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் பத்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல் விழா- 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல் .சுதர்சன் தலைமையில் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ் நாட்டின்நாட்டின் Treffpunkt wittig kofen jupiters trasse 15 ,3015 B இல் நடைபெற்றது
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது அத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டிருந்தது . இந்நிகழ்வுக்கு உதவிய அனைவருக்கும் செயலாளர் அம்பலவானர் ராஜன் அவர்கள் நன்றிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours