( வி.ரி.சகாதேவராஜா)
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 163 ஆ வது ஜனன தினவிழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆச்சிரமத்தின்
பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில்
ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
பகவான்
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆலயத்தில் இடம்பெற்ற ஜெயந்தி விழாவில் அதிகாலை
5 மணியளவில் மங்கள ஆரத்தி சுப்ரபாதம் என ஆரம்பித்து ஆலய வலம் ஹோமம் பஜனை
சொற்பொழிவுடன்
சுவாமி விவேகானந்தர் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours