இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலுக்கான சங்கமானது 2007ம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட, தாவர நோயியல் மற்றும் பூஞ்சணயியல்க்கான வல்லுநர்களின் முன்னணி தொழில்முறை அறிவுசார்ந்த அமைப்பாகும், இச்சங்கமானது International Society of Plant Pathology (ISPP), Asian Mycological Association (AMA), மற்றும் Asian Association of Plant Pathology (AASPP) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச மாநாடு, இச்சங்கத்தின் தற்போதைய தலைவர், கிழக்குப் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் திருமதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், சிறப்புரையை இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஆற்றுவுள்ளார். மேலும், இந்த முழு அமர்வில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் மதிப்பிற்குரிய தாவர நோயியல் நிபுணரான பேராசிரியர் பால் டபிள்யூ. ஜே. டெய்லர் சிறப்புரை ஆற்றுவுள்ளார்.
இலங்கையில் தாவர நோயியலின் வரலாறு 1867 ஆம் ஆண்டின் காபி தோட்டங்களில் ஏற்பட்ட Coffee rust தொற்றுநோய்க்கு முந்தையது, இந்த நோய் மலையகத்தில் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்ததுடன், இந்நோய் முதன்முதலில் மடுல்சிமையில் உள்ள (இன்றைய பதுளை மாவட்டம், ஊவா மாகாணம்) ஒரு தோட்டத்தில் ஆரம்பித்து, காபி பயிரிடும் அனைத்துப் பகுதிகளிலும் வேகமாகப் பரவி, இலங்கையில் காபி பயிர்ச்செய்கையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, இந்நிலைமை இலங்கையில் தாவர நோயியல் ஆராய்ச்சியிற்கு வழிவகுத்ததுடன் வெப்பமண்டல தாவர நோய் ஆய்வுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
இலங்கையில் பூஞ்சணயியல் துறை இன்னும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1950 களில், 2,100 க்கும் மேற்பட்ட பூஞ்சண இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டதுடன், இவற்றில் 60% மானவை இலங்கையிலிருந்து புதிய இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1936 ம் ஆண்டுவரை 340 தாவர இனங்களை பாதிக்கும் 885 தாவர நோய்களை பூஞ்சணயியல் துறை ஆராய்ச்சியாளர்கள் (Mycologists) கண்டறிந்தனர். இன்று, பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியல் ஆகியவை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன.
Post A Comment:
0 comments so far,add yours