எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
புதிய
அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னேடுத்து
நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக
மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இன்று பழைய மாவட்ட
செயலகத்தில் இடம் பெற்றது.
கீளின் ஶ்ரீ லங்கா
வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல்
அடிப்டை , மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில்
நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களை மாவட்ட செயலனியினர் மேற்பார்வையில்
கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கீளின் ஶ்ரீ லங்கா
வேலைத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில்
நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐந்தான்டு வேலைத்திட்டம் தொடர்பான விரிவான
தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
வளமான நாடு அழகான தேசம்
எனும் தொணிப்பொருளை அடைவதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றினைந்து
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours