( வி.ரி.சகாதேவராஜா)
கல்வி
அமைச்சு நடாத்திய தேசிய மட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞானப்
போட்டிகளில் காரைதீவு மாணவன் சத்தியநாதன் குகேஸ் இரு பதக்கங்களைப் பெற்று
சாதனை படைத்துள்ளார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவனான எஸ்.குகேஸ், இரண்டு பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்.
செல்வன்
சத்தியநாதன் குகேஸ் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப்
பதக்கத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடம் பெற்று வெண்கலப்
பதக்கத்தையும், பெற்றுக் கொண்டதன் மூலம் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
காரைதீவு
விபுலானந்தா வீதியில் வதியும், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி
உதவியாளர் சத்தியநாதன் - ரதி தம்பதியினரின் ஏக புதல்வர் ஆவார்.
தேசிய
மட்டத்திலான இப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதல் நிலையினைப்
பெற்றிருப்பதுடன் மாகாணத்தில் 6 இடங்களையும் தேசிய மட்டத்தில் 1
இடத்தினையும் பெற்று கல்முனை வலயம் கிழக்கு மாகாணத்தில் 5ஆம் இடத்தினைப்
பிடித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours