( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் வலய வருடாந்த தைப்பொங்கல் விழா வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார்  தலைமையில் இன்று  (07) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசியுரையை திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் வழங்கினார்.

பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அபிவிருத்தி உத்தியோத்தர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், எனைய பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கதாகும்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours