கமல்

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரால் கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருப்பை கழுத்து போன்றவற்றில் ஏற்படும் புற்று நோயை முன்கூட்டியே வரவால் தடுக்கும் முகமா நாடு பூராகவும்  எச்.பீ.வீ. எனும் தடுப்புசி  மாணவர்களுக்கு ஏற்றப்பட்டு வருகின்றது. 

இதன் முதற்கட்டமாக இத்  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நேற்று 25.02.2025 திகதி முன்னெடுக்கப்பட்டது.
 
சுகாதார பரிசோதகர் மேற்பார்வையாளர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் இத் தடுப்பூசி சம்பந்தமான பூரண விளக்கங்களும் சுகாதார பரிசோதகர்களினால் இதன்போது வழங்கப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours