எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜுத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது அஷ்ஷெய்க் எம். எஸ். நுஸ்ரி நளீமி யினால் நோன்பின் மகத்துவமும் இன நல்லுறவும் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம் ஐ அப்துல் கபூர் மதனி அவர்களின் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வில் ஏராளமான தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours