( வி.ரி.சகாதேவராஜா)

திருக்கோவில் தாண்டியடி திருப்பதி பாலர் பாடசாலைக்கு ரூ5லட்சம் உட்பட்ட நிதியில் அபிவிருத்தி திட்டங்களை பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை றோட்டரிக் கழக முன்னாள் தலைவருமான  பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் ஆரம்பித்து வைத்தார்.

நேற்று அங்கு விஜயம் செய்த அவர் முதற்கட்டமாக ஒரு தொகை பணத்தை வழங்கினார்.

அதேவேளை அப்பாடசாலையில் கல்விகற்கும் வசதி குறைந்த ஒரு மாணவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றும் அவர்களது வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours