சா.நடனசபேசன்

துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 07.03.2025 வெள்ளிக்கிழமை  காலை ஒன்று கூடல் நிகழ்வின் போது அதிபர் கு.திருச்செல்வம் தலைமையில இடம்பெற்றது. 

இதன்போது தேசிய ரீதியில் கட்டுரை போட்டியில் சாதனை படைத்த  தவராசா ஹருட்சனா சாந்தகுமார் சனுவி ஆகிய மாணவர்களும் சித்திரப் போட்டியில் சாதனை படைத்த உதயராசா யருக்சன் மேகநாதன் பர்ஜித் ஆகிய மாணவர்களும்  மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours