(க.விஜயரெத்தினம்)



மட்டு.சந்திவெளியில் காட்டுபகுதியில் வீசிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள தேவபுரம் மைதானத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலாமாக இன்று (15) சனிக்கிழமை

காலையில் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours