சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டியின் இறுதிநாள் நிகழ்வு 2025.02.24 ம் திகதி அதிபர் எஸ் .திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது .
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பணிப்பாளர் எஸ் .மகேந்திரகுமார் மற்றும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர். பி.பரமதயாளன் விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.முஸ்தாக் அலி மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையின் விவசாய பாட ஆசிரிய ஆலோசகரும் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளருமான எஸ்.மோகன் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனையின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜனாப்எம்;.வை.ஏ நாசிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .
Post A Comment:
0 comments so far,add yours