இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தின் முதல்வர் எஸ்.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு அதிகளாக சாதனை படைத்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூல் வெளியீடு,கட்டிடத் திறப்பு விழா மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் தேசிய ,மாகாண,வலய ரீதியாக சாதனை படைத்த மாணவர்கள்,ஆசிரியர்கள் பிரதம அதிதியினால் நினைவுச் சின்னம்,சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதி பாடசாலைச் சமுகத்தினரால் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours