திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக திருமதி புனிதவதி துஷ்யந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

இவர் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில்  2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர்,   பொன்னம்பலம் - ராணிதேவி தம்பதியின் கனிஷ்ட புதல்வியாவார். யாழ் வேம்படி மகளிர் கல்லுாரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுாரியிலும் கல்வி பயின்ற இவர் கொழும்பு  பல்கலைக்கழகத்தில் 2005  ஆண்டு சட்டமாணி  பட்டத்தினைப் பெற்று  2006 ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக  பதவிப்பிரமாணம்  செய்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours