( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார்  நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .

இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் மருத்துவர் எம்.ஜே.சட்.எம்.ஜலால்டீன்  தலைமையில் நடைபெற்றது .

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர்  மற்றும் ஏ. ஆதம்பாவா ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .

வரவேற்புரையை  டாக்டர் ஜெமில் சம்மாந்துறை வைத்தியசாலை பணிப்பாளர்  மருத்துவர் எம்.கலாமுடீன் வரவேற்புரை நிகழ்த்த, வைத்தியசாலையின் நிர்வாகி ஹில்டன் ரியாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

பெருந்தொகையான தமிழ் முஸ்லிம் சிங்கள டாக்டர்கள் ஊடகவியலாளர்கள்  தொழிலதிபர்கள் என பல  பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours