( வி.ரி.சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற நுவரெலியா லங்காதீஈஸ்வரர் ஆலய காயத்ரிபீட மகா கும்பாபிஷேகப்  பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9-10 மணியளவிலான சுபமுகூர்த்த வேளையில் கோலாகலமாக நடைபெற இருக்கின்றது .

காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் ஆசியோடு ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா கிரியைகள் யாவும் 06 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது என்று ஆலய அறங்காவலர் நிர்வாகி சக்திவேல் சந்திரமோகன் தெரிவித்தார்.

108 பாணலிங்க பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழாவின்  எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 08ஆம் 9 ஆம் ஆம் திகதிகளில் காலை முதல் மாலை வரை நடைபெறும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours