(வி.ரி. சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலய தேரோடும் வெளி வீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினத்திற்கு ஆலயத்தில் கௌரவம் அளிக்கப்பட்டது.

ஆலயத்தின் வருடாந்த  
திருவிழா தற்போது சிறப்பாக காலை இரவு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விசேட திருவிழாவின்போது இந்த கௌரவிப்பு விழா இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் முன்னிலையில், ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.நாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பரிபாலன சபையினரும் பக்தர்களும் சூழவிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours