(சுமன்)


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான பேராசிரியர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சிறிநாத், முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வேட்பாளர், அதிதிகள் வரவேற்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரால் குறித்த தேர்தல் பணிமனை திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours