தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
(சுமன்)
தியாக
தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும்
முகமாகவும், இளைஞர் சமுதாயத்திற்கு அன்னை பூபதியின் தியாகத்தை பகிரும்
நோக்குடன் மட்டக்களப்பு தாயக செயலணியின் ஏற்பாட்டில் வாகரை
பிரதேசத்திற்குட்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களை உள்ளடக்கியதான உதைபந்தாட்ட
சுற்றுப் போட்டி வாகரை கண்டலடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு
தாயக செயலணி அமைப்பில் ஒருங்கிணைப்பாளர், சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார்
தலைமையில் இடம்பெற்ற இவ் உதைப்பந்தாட்டப் போட்டி ஆரம்ப நிகழ்வில் குறித்த
அமைப்பின் வாகரை பிரதேச பிரதிநிதிகள், உதைபந்தாட்டக் கழகத்தின் விளையாட்டு
வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போட்டி
ஆரம்பத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி,
மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், வீரர்கள் அறிமுகம் என்பன
இடம்பெற்று தாயக செயலணி அமைப்பின் நிருவாகிகளால் போட்டி ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours