வெளியான உயர்தரப் பரீட்சையில் வேப்பையடிப்பிரதேச மாணவன் லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திபெற்று மாவட்டமட்டத்தில் 8 ஆவது நிலையினைப்  பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளார்.

இவர் கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று இச்சாதனையினை நிலைநாட்டியுள்ளதுடன் இவர் ஆரம்பக் கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தினை கல்முனை பாற்றிமா தேசியபாடசாலையில் கற்று வெளியான உயர்தரப் பரீட்சையில் இச்சாதனையினை நிலைநாட்டியுள்ளார். இம்மாணவனை வழிப்படுத்திய பாற்றிமா தேசிய பாடசாலை அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு மாணவனது தந்தை  லோகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours