கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்
கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தல்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் விழிப்புணர்வு ஊர்வலம்
கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் ஸ்தாபிதம்! பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம்!
களுவாஞ்சிக்குடியில் "கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " முன்னெடுப்பு
( வி.ரி. சகாதேவராஜா)
49வது
தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான
கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி
சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது.
காரைதீவு
வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்தில்
காரைதீவு பிரதேச செயலக அணியாக காரைதீவு விளையாட்டு கழகம் களத்தில் இறங்கி
இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
மொத்தமாக 13 பிரதேச செயலக அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டி கல்முனை கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அம்பாறை
மாவட்ட மட்ட போட்டிகளின் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்
போட்டியில் மகா ஓயா பிரதேச செயலக அணியுடன் மோதிய காரைதீவு பிரதேச செயலக
பிரிவு சார்பாக கலந்து கொண்ட காரைதீவு விளையாட்டு கழகம் முதலிடம் பெற்று
மாவட்ட சாம்பியனாகியது.
கழக உறுப்பினர்களான வரனுஜன் மற்றும் சதுசன் ஆகியோர் இவ் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர்.
அடுத்து இவர்கள் மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours