திருக்கோவில் நாவிதன்வெளி வண்டில்கள் சந்தித்தன! தமிழரசின் பதிலையடுத்து மாகாணசபை பற்றி தீர்மானிக்கப்படும்!
மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகருக்கு காரேறுமூதூரிலிருந்து ஓர் வரலாற்று வாழ்த்து மடல்! இன்று(17) சனிக்கிழமை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கருங்கல் சிலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் திறந்து வைக்கப்படுகிறது. அதனையொட்டி சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து ஒரு வாழ்த்து மடல்
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் கற்சிலை திறந்து வைக்கப்பட்டது
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து சவூதி அரேபிய தூதுவராலய மேற்பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு நிகழ்வில் இரண்டாயிரத்து மேற்பட்டோர் பங்கேற்பு
மட்டக்களப்பில் ரயில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரது பெறுமதியான பொருட்கள் மட்டக்களப்பில் ஆட்டோக்காரரால் அபகரிப்பு.
( வி.ரி. சகாதேவராஜா)
49வது
தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான
கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணி
சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது.
காரைதீவு
வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்தாட்டத்தில்
காரைதீவு பிரதேச செயலக அணியாக காரைதீவு விளையாட்டு கழகம் களத்தில் இறங்கி
இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
மொத்தமாக 13 பிரதேச செயலக அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டி கல்முனை கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அம்பாறை
மாவட்ட மட்ட போட்டிகளின் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்
போட்டியில் மகா ஓயா பிரதேச செயலக அணியுடன் மோதிய காரைதீவு பிரதேச செயலக
பிரிவு சார்பாக கலந்து கொண்ட காரைதீவு விளையாட்டு கழகம் முதலிடம் பெற்று
மாவட்ட சாம்பியனாகியது.
கழக உறுப்பினர்களான வரனுஜன் மற்றும் சதுசன் ஆகியோர் இவ் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர்.
அடுத்து இவர்கள் மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours