மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
க.விஜயரெத்தினம்
துறைமுகங்கள்
மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ரூவன் கொடித்துவக்கு
இன்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்
கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை 09.00 மணியளவில்
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் மற்றும்
சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ரூவன் கொடித்துவக்கு
மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் மட்டக்களப்பு நகருடன்
புதூர் பகுதியை இணைக்கும் பாதை தொடர்பிலான விடையங்கள் தொடர்பாகவும் இதன்
போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு விமானப்படை
கட்டளை அதிகாரி சரத் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்
திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவி வனிதா செல்லப் பெருமாள்
உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்த தடன், அவற்றிற்கான தீர்வுகளை மிக விரைவாக
பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.
மட்டக்களப்பு நகரில்
இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை விமானப்படைக்கான காணியின் ஊடாக
புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர்
தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours