வளிமண்டளவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு மட்டு அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு!!
அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும். தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் .
அம்பாறை மாவட்டத்தில் புத்தாண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடிக்கிறது!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்
(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில் நேற்று நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் வருமான பரிசோதகர் எம்.எஸ்.எம். உபைத், விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் நஸ்ரின் ஹாஜா, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி. ஜமால்தீன், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் அங்கு வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சுமூகத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகை நிலுவைகளை அறவிடுதல், வாடகைக் கட்டணங்களை சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கல்முனை மாநகர பொதுச் சந்தையினதும் வர்த்தகர்களினதும் நலன் கருதி கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வர்த்தகர் சங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று சங்கப் பிரதிநிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours