சா.நடனசபேசன்


மட்டக்களப்பு துறைநீலாவணை அருள்மிகு ஸ்ரீ உச்சிமா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர திருச்சடங்கு எதிர்வரும் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.

06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் முத்துச்சப்புறத்தில் துறைநீலாவணை மற்றும் துரைவந்திய மேட்டுக்கிராமங்களுக்குச் செல்வதுடன் 12 ஆம் திகதி சனிக்கிழமை நோற்புநூல்கட்டுதல் கடல் சமுத்திர நீராடல் தீமூட்டுதல் போன்ற விஷேட நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் பானை எழுந்தருளச்செய்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெறுவதுடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.ஆலயப் பூசைகள் யாவும் பிரதம பூசகர் பொன்னுத்துரை சிவம் ஐயா தலைமையில் இடம்பெற இருக்கின்றது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours