வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப் போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவு
மருத்துநீர் என்றால் என்ன?
கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்
கல்முனை பொதுச் சந்தை குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை.!
கல்முனை மாநகரில் சிறப்பாக நடைபெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய முப்பெரும் இரதோற்சவம் !
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில்
உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது.
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதனால் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு இடம் பெற்றன.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.
இம் முறை இருபது விநியோகிக்கும் நிலையங்கள் மூலம் தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதுடன், தபால் மூல வாக்குச் சீட்டுக்களை எண்ணும் பணி மண்முனை வடக்கு பிரதேச செயலத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours