(வி.ரி.சகாதேவராஜா)

சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் "வேலோடுமலை வேலவன் இசை பாடல்"  வெளியீட்டு விழா பங்குனி உத்தர தீர்த்த திருவிழாவன்று ஆலய ஆதீனகர்த்தா எஸ். தியாகராஜா சுவாமிகள் தலைமையில்  நடைபெற்றது.

வேலோடு மலையில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ, நமசிவாய மகேஸ்வரன் சுவாமி, தலைவர் ஆதித்தன் மற்றும் துணைத்தலைவர் மனோகரன் முன்னிலையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் திலக்சன்  பாடலை அருமையாக அமைத்துள்ளார்.

பாடலை யாத்த மற்றும் பாடிய மூவரும் ஆலயம் சார்பிலும் சித்தர்கள் குரல் சார்பிலும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours