செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
நூருல் ஹுதா உமர்
மாவடிப்பள்ளி கிராமத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் எப்போதும் கரிசனையுடன் செயற்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 06 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் சுற்றுமதில்கள் மற்றும் பள்ளிவாசல் அபிவிருத்திப்பணிகளை இன்று கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் ஆராய்ந்தார்.
மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரியபள்ளி வாசலின் தலைவர் வை.வி. அப்துல் மனாப் தலைமையிலான நம்பிக்கையாளர்களை சந்தித்து ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் அபிவிருத்திப்பணிகள், ஊர்நலன் சார் விடயங்களை கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது நிதியொதுக்கீட்டில் நடைபெறும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அடுத்தகட்ட பணிகளுக்கு தேவையான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த விஜயத்தின் போது தொடர்ச்சியாக மாவடிப்பள்ளி கிராமத்தின் வளர்ச்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினதும், அவரது குடும்பத்தினரினதும் தொடர்ச்சியான பங்களிப்பு தொடர்பில் சிலாகித்து பேசிய ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் அவரின் தொடர்ச்சியான மக்கள் பணிக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours