\(எம்.என்.எம்.அப்ராஸ்) 

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு இன்று(19)விஜயம் செய்தார்.

முன்னாள் கல்முனை மாநகர முன்னாள் பிரதி 
முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள்,இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் (19) கல்முனையில் இடம்பெற்றது.

ரஹ்மத் மன்சூர் அவர்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உதவி திட்டங்களை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார். 

மேலும் அதிதிகளான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிக இலங்கைக்கான ஆலோசகர் நுஃமான் ரஷீட் ஹயானி, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ. எம்.ஜெளபர்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான்,மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours