( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர்    தலைமையில் காரைதீவு  பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் என்பன நேற்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது இம்மாதம்  பல்வேறு உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளபட்டதுடன்   உணவகங்கள்,பல்பொருள் அங்காடிகள்,மீன்வாடிகள்,பழ விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள்,உணவு கண்காட்சிகள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் போன்றன பரிசோதனை மேற்கொள்ளபட்டு சுகாதார ஆலோசனை வழங்கபட்டத்துடன் உணவு சுகாதாரத்தை மீறிய நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது.

இதன்போது சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினருக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours