பல்கலைக்கழக மாணவனின் கல்வி நடவடிக்கைக்காக மாதந்தம் நிதி உதவி
செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் தலைமையில் காரைதீவு
பிரதேசங்களில் உள்ள பழக்கடைகள், ஹோட்டல்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவு
கையாளும் நிறுவனங்கள் என்பன நேற்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்
போது இம்மாதம் பல்வேறு உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளபட்டதுடன்
உணவகங்கள்,பல்பொருள் அங்காடிகள்,மீன்வாடிகள்,பழ விற்பனை நிலையங்கள்,
இறைச்சி விற்பனை நிலையங்கள்,உணவு கண்காட்சிகள் மற்றும் நடமாடும் உணவு
விற்பனை நிலையங்கள் போன்றன பரிசோதனை மேற்கொள்ளபட்டு சுகாதார ஆலோசனை
வழங்கபட்டத்துடன் உணவு சுகாதாரத்தை மீறிய நபர்களுக்கெதிராக சட்ட
நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது.
இதன்போது
சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப்
பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் பாவிக்க முடியாத,
சேதமடைந்த உணவு தயாரிக்கும் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த
அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா மற்றும்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினருக்கு மக்கள் பாராட்டுகளை
தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours